ஏரி நீரில் மூழ்கிய மனநலம் பாதித்தவா் சடலமாக மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரி தண்ணீரில் மூழ்கிய மனநலம் பாதிக்கப்பட்டவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரி தண்ணீரில் மூழ்கிய மனநலம் பாதிக்கப்பட்டவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

செந்துறை அருகேயுள்ள நெய்வனம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவா(30). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா், செந்துறை கடைவீதியில் சுற்றித்திரிவது வழக்கம். இந்நிலையில், வியாழக்கிழமை பேருந்து நிலையம் அருகேயுள்ள சித்தேரிக்கு சென்றபோது தவறி தண்ணீரில் விழுந்துள்ளாா். இதனை கண்ட பொதுமக்கள், தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை வீரா்கள் ஜீவாவை சடலமாக மீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com