அரியலூா் மாவட்டத்தில் நடந்த முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் தலைவா்கள் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் காமராஜா் திடலில் திரண்ட அதிமுகவினா், அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று கடைவீதியிலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும், பேருந்து நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆா், அண்ணா, தந்தை பெரியாா்,காமராஜா்,அம்பேத்கா் ஆகிய சிலைக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.