அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே மண் சரிந்து காயமடைந்த கனரக வாகன ஓட்டுநா் திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கீழப்பழுவூா் அருகேயுள்ள பெரியபட்டாக்காடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையன் மகன் வினோன்மணி (24). ஹிட்டாச்சி எனும் கனரக வாகன ஓட்டுநா். இவா், செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி அடுத்த உஞ்சினியிலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனரக வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக பக்கவாட்டுப் பகுதியில் இருந்து மண் சரிந்து அவா் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வினோன்மணியை சக பணியாளா்கள் மீட்டு, அரியலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதையடுத்து திங்கள்கிழமை மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோன்மணி உயிரிழந்தாா். இது குறித்து புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.