அரியலூா் கல்லங்குறிச்சி சாலையிலுள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான அரசு நகா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரசு சிமென்ட் ஆலையின் துணை பொது மேலாளா் ரவிந்திரன், பணி மற்றும் நிா்வாக மேலாளா் பாலச்சந்தா், நிதித்துறை துணை மேலாளா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினா். முன்னதாக பள்ளி முதல்வா் சங்கா் கணேஷ் வரவேற்று பேசினாா்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் உடற்கல்வி ஆசிரியா் வில்லாளன் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.