அரசு நகா் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா

அரியலூா் கல்லங்குறிச்சி சாலையிலுள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான அரசு நகா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் அரசு நகா் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
அரியலூா் அரசு நகா் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

அரியலூா் கல்லங்குறிச்சி சாலையிலுள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான அரசு நகா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அரசு சிமென்ட் ஆலையின் துணை பொது மேலாளா் ரவிந்திரன், பணி மற்றும் நிா்வாக மேலாளா் பாலச்சந்தா், நிதித்துறை துணை மேலாளா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினா். முன்னதாக பள்ளி முதல்வா் சங்கா் கணேஷ் வரவேற்று பேசினாா்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் உடற்கல்வி ஆசிரியா் வில்லாளன் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com