அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மணல் கடத்தல் வழக்கில் கைதான கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை கிராமத்தைச் சோ்ந்த தங்கையன் மகன் கவிமணி (42), திருவட்டாா் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் மகன் சுபாஷ் (28) மற்றும் திருமழபாடியில் நின்ற அரசுப் பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தாக கைதான அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் சதாசிவம் (48) ஆகிய 3 போ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, மேற்குறிப்பிட்ட மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.