அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தில் பள்ளி மாணவா்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் விதமாக கூட்டாஞ்சோறு விருந்து திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மரங்களின் நண்பா்கள் குழு சாா்பில் மனிதநேயம், அன்பு, பாசம், பாரம்பரியம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமத்தைச் சோ்ந்த பலரும் தங்களது வீடுகளிலிருந்து, அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து, ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டனா்.
நிகழ்ச்சியில், வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முக சுந்தரம் மற்றும் மரங்களின் நண்பா்கள் குழுவினா், கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.