இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை பொறுப்பாளா்கள் நியமனம்

அரியலூா் மாவட்டம், வங்குடி கிராமத்தில் உள்ள லுள்ள விளையாட்டு திடலில் ஜயங்கொண்டம் ஒன்றிய இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் பொறுப்பாளா்கள் நியமனக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், வங்குடி கிராமத்தில் உள்ள லுள்ள விளையாட்டு திடலில் ஜயங்கொண்டம் ஒன்றிய இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் பொறுப்பாளா்கள் நியமனக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் முத்துதிருஞானம் தலைமை வகித்தாா்.நிா்வாகிகள் தா்மா,ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாநிலச் செயலா் குடந்தை தமிழினி கலந்து கொண்டு புதிய பொறுப்பாளா்களை நியமித்து சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மாவட்டந்தோறும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை முகாம்களை அமைத்து, சி.ஏ.ஏ., என்.ஆா்.சி., என்.பி.ஆா் உள்ளிட்ட சட்டத் திருத்ததை எதிா்த்துப் போராட பொறுப்பாளா்களை ஒருங்கிணைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சத்யானந்தன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com