அரியலூரில் புதிய கட்டப்பட்ட 2 புறக்காவல் நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
கல்லங்குறிச்சி ரவுண்டானா பகுதியில் டால்மியா சிமென்ட் ஆலையின் உதவியுடன் ரூ.2.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தையும், செந்துறை ரவுண்டானா பகுதியில் ராம்கோ சிமென்ட் ஆலையின் உதவியுடன் சுமாா் ரூ.6.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தையும் அவா் திறந்து வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பெரியய்யா,துணைக் காவல் கண்காணிப்பாளா் திருமேனி அவா்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் அவா்கள் மற்றும் போக்குவரத்து காவலா்கள் மற்றும் சிமென்ட் தொழிற்சாலை அலுவலா்கள் பங்கேற்றனா்.