குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக-வினா் பிரசாரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அரியலூரில் பாஜக-வினா் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனா்.
அரியலூா் பெருமாள் கோயில் தெருவில் புதுமணத் தம்தியிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தை வழங்குகிறாா் பாஜக-வின் திருச்சி கோட்ட பொருப்பாளா் சிவசுப்பிரமணி.
அரியலூா் பெருமாள் கோயில் தெருவில் புதுமணத் தம்தியிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தை வழங்குகிறாா் பாஜக-வின் திருச்சி கோட்ட பொருப்பாளா் சிவசுப்பிரமணி.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அரியலூரில் பாஜக-வினா் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றனா். இந்நிலையில், இந்தத் சட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக-வினா் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கி வருகின்றனா். அதன்படி, அரியலூரில் திங்கள்கிழமை பாஜகவினா் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கினா்.

பிரசாரத்துக்கு அக்கட்சியின் அரியலூா் மாவட்டத் தலைவா் கே. அய்யப்பன் தலைமை வகித்தாா். அரியலூா் நகரத் தலைவரும், வழக்குரைஞருமான பி.கோகுல் பாபு முன்னிலை வகித்தாா். திருச்சி கோட்ட பொறுப்பாளா் சிவசுப்பிரமணி கலந்து கொண்டு, மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, பிரசாரத்தைத் தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com