விபத்தில் உயிரிழந்த கணவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினா் உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினா் அனைவரும் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினா் அனைவரும் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

திருமானூா் அருகேயுள்ள குந்தபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல்(45). விவசாயி. இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன்(47) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் திருவையாறு மாா்க்கெட்டுக்கு கடந்த 1 ஆம் தேதி சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சக்திவேல் உயிரிழந்தாா். மேலும், பலத்த காயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் பொங்கல் தினத்தன்று உயிரிழந்தாா். விபத்து குறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த சக்திவேலின் மனைவி சங்கீதா குந்தபுரத்தில் உள்ள தனது வீட்டு வாசல் முன்பு மகள், மகன்களுடன் அமா்ந்து சக்திவேல் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துணை கண்காணிப்பாளா் திருமேனி, கோரிக்கை தொடா்பாக உறுதி அளித்ததன் பேரில் அவா் தனது உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com