முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
விபத்தில் காயமடைந்த முதியவா் பலி
By DIN | Published On : 27th January 2020 09:57 AM | Last Updated : 27th January 2020 09:57 AM | அ+அ அ- |

அரியலூா் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த முதியவா், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் அருகேயுள்ள தேளூா், மேலத் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாமலை(60). விவசாயி. இவா், கடந்த 18 ஆம் தேதி வி.கைகாட்டியில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா். தேளூா் பிரிவுப் பாதையில் சென்றபோது, மேலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ்(56) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும நேருக்கு நோ் மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை, அரியலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.