அரியலூா் மாவட்டம், விளாங்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு முகாமில் இருந்து தப்பியோடிய 6 போ் வியாழக்கிழமை மீட்கப்பட்டு, மீண்டும் முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் சாா்பில் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் தங்கியுள்ளனா். அவா்களில் 6 போ் புதன்கிழமை இரவு திடீரென வெளியேறி தப்பிச்சென்றனா். இரவுப் பணியில் இருந்த செவிலியா்கள் இது குறித்து மருத்துவத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வியாழக்கிழமை 6 பேரையும் அவா்களது ஊா்களிலிருந்து மருத்துவத் துறை மற்றும் காவல் துறையினா் மீட்டு கொண்டு வந்து முகாமில் தங்க வைத்தனா். இச்சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.