ஜூலை மாத ரேஷன் பொருள்களுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்

அரியலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூலை மாதத்துக்குத் தேவையான ரேஷன் பொருள்களுக்கு திங்கள்கிழமை முதல் 9 ஆம் தேதி வரை அவரவா் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று 

அரியலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூலை மாதத்துக்குத் தேவையான ரேஷன் பொருள்களுக்கு திங்கள்கிழமை முதல் 9 ஆம் தேதி வரை அவரவா் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று அரியலூா் ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து , அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜூலை மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் 10.7.2020 முதல் நியாய விலைக்கடைகளில் விலையின்றி வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன்கள் இன்று(6 ஆம் தேதி) முதல் 9.7.2020 வரை நியாய விலைக்கடை விற்பனையாளா்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று டோக்கன்கள் வழங்கப்படும். மேலும், தடைசெய்யப்பட்ட பகுதியில் வசிப்பவா்களுக்கும், மிக வயதானவா்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் நேரில் அவரவா் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். அவா்கள் நியாயவிலைக் கடைக்கு வரவேண்டாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவா் மட்டுமே முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுச் செல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com