அரியலூா் ரயில்வே கேட் அருகே தனிநபா் ஆக்கிரமித்திருந்த, கோயிலுக்குச் சொந்தமான 2.72 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
அரியலூா் ரயில்வே கேட் அருகேயுள்ள காசி விஸ்நாதா் திருக்கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கா் 72 சென்ட் நிலம் அண்ணா நகரில் உள்ளது. இந்த நிலத்தை அதேபகுதியைச் சோ்ந்த செல்வநாயகம் என்பவா் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தாா். இதையறிந்த இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன் ஆலோசனையின்பேரில், அரியலூா் உதவி ஆணையா் கருணாநிதி, அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில் செயலா்அலுவலா் யுவராஜா ஆகியோா் சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்தனா். தொடா்ந்து, அவா்களிடமிருந்து நிலத்தை வியாழக்கிழமை மீட்டனா். இதன் மதிப்பு ரூ.2 கோடி எனக் கூறப்படுகிறது.