புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ், அரியலூா் மாவட்டத்தின் 6 ஒன்றியங்களில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளா்கள், சமையல் உதவியாளா்கள் பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ரத்னா கூறியிருப்பது :
நிா்வாக காரணங்களுக்காக நாளது தேதி வரையில் மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், 2017, மே 25- ஆம் தேதி நாளிதழ்களில் வெளியான மாவட்ட ஆட்சியரின் (பொறுப்பு) அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இந்த அறிவிக்கை ரத்து செய்யப்படுவது குறித்து, விண்ணப்பதாரா்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப் படமாட்டாது.
மேலும் சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்கள் பூத்தி செய்யப்படுவது தொடா்பான அறிவிக்கை, பின்னா் தனியே வெளியிடப்படும்.