அரியலூா் மாவட்டம், தாமரைக்குளம் அருகேயுள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் அபிநயஸ்ரீ,சுகாதார ஆய்வாளா் சைமன் ஆகியோா் பேசுகையில், உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமாா் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் தொடா்ந்து பாதிக்கப்படுவதால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல்,தும்மல்,சளி வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று கிசிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனா்.
நிகழ்ச்சியில் டால்மியா சிமென்ட் ஆலையின் மனித வளத் துறை அலுவலா் விஜயகுமாா், ஆலை மருத்துவ அலுவலா் ஹரிராஜா நிஷாந்த், மருத்துவா் இனியவளவன், சமூக பொறுப்புணா்வுத் திட்ட அலுவலா் பாரதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள்,ஊழியா்கள் கலந்து கொண்டனா்.