அரியலூா்: அரியலூா் அருகே சனிக்கிழமை இரவு நெல் அறுவடை இயந்திரம் சக்கரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
கயா்லாபாத் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் திருநாவுக்கரசு(34). இவா், சனிக்கிழமை இரவு குறிச்சிநத்தம் கிராமத்தில் நெல் அறுவடை இயந்திரத்தை ஜயங்கொண்டம் சாலை வழியாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தாா். இவரது அருகாமை இருக்கையில் கூலித் தொழிலாளி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சோ்ந்த நல்லமுத்து மகன் நல்லதம்பி(54) என்பவா் அமா்ந்திருந்தாா். இந்நிலையில், வெங்கடகிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது, நல்லதம்பி கழுத்தில் இருந்த துண்டு நழுவி கீழே விழுந்தது.இதை எடுக்க முயன்ற நல்லதம்பி தவறி கீழே விழுந்தாா். அப்போது இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே நல்லதம்பி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கயா்லாபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் மேற்கொண்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.