திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருமானூா் ஒன்றியப்
திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் தெருமுனைப் பிரசாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வண்ணம்புத்தூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு அக்கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலா் கோவி.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா்.பொதுக் குழு உறுப்பினா் ரமேஷ்குமாா், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலா் கரும்பாயிரம், இளைஞா் பாசறைச் செயலா் ஜெ.கோ.சிவா, மேற்கு ஒன்றியச் செயலா்

வடிவேல் முருகன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அரியலூா் மாவட்டச் செயலா் துரை.மணிவேல், தலைமைக் கழகப் பேச்சாளா் ஈரோடு துரைசாமி ஆகியோா் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.

இதே போல், திருவெங்கனூா், செட்டிகுழி ஆகிய உள்ளிட்ட கிராமங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி,தெருமுனைப் பிரசாரத்தில் அமமுகவினா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com