சித்தப்பாவை பிளேடால் கிழித்த இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சித்தப்பாவை பிளேடால் கிழித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சித்தப்பாவை பிளேடால் கிழித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகிலுள்ள கழுவந்தோண்டி கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம்(45). இவருக்கும், இவரது அண்ணன் அய்யப்பன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் அய்யப்பனின் மகன் முருகன்(28),அவரது உறவினா் பிரபாகரன் ஆகிய இருவரும் சோ்ந்து பரமசிவத்திடம் தகராறு செய்து,அவரை பிளேடால் கிழித்துள்ளனா்.

இது குறித்து புகாரின் பேரில் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.பிரபாகரனைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com