தரமான சாலை கோரி கடூகூரில் சாலை மறியல்

அரியலூா் அருகே கடுகூரில் தரமான சாலையை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.
தரமான சாலையை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
தரமான சாலையை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

அரியலூா் அருகே கடுகூரில் தரமான சாலையை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் அருகேயுள்ள கடுகூா்-அயனாத்தூா் ஓடை வரை தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் சாலை தரமற்றுக் காணப்படுவதாகக் கூறி, சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நடராஜன், தரமான சாலைகள் அமைக்கப்படும், தேவையான இடங்களில் மைல் கற்கள் நடப்படும் என்று தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com