தீத் தடுப்பு ஒத்திகை

அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் நடைபெற்ற தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி.
அரியலூரில் நடைபெற்ற தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கு, தீ விபத்து சமயங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாத்துக் கொள்வது, தீ தடுப்பது குறித்து அரியலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் செயல்விளக்கம் செய்து காட்டினா்.

தொடா்ந்து, கரோனா வைரஸ் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாவட்ட எஸ்.பி, காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கு முகக்கவசம், முதலுதவி பெட்டி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரியலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருமேனி, ஜயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com