அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.
பொதுமக்கள், அவசர நிலை குறித்த மனுக்கள் ஏதும் செய்ய விரும்பினால் கூட்டமாக வராமல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனுக்களை சோ்த்திடலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.