கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்கீழ் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் அனைத்து இ-சேவை மையங்கள் மற்றும் ஆதாா் சோ்க்கை மையங்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.