அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
திருமானூா் அருகேயுள்ள கீழக்குளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மருதை மகன் வெங்கடாசலம் (63). விவசாயி. இவா், திங்கள்கிழமை இரவு அதே ஊரைச் சோ்ந்த அன்பழகன்(55) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஏலாக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா். சத்திரத்தேரி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த சுமை ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலம் திருமானூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து, திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.