அரியலூரில் 144 தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்ற 200 மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலில் உள்ளது. இதையடுத்து போலீஸாா் இந்த உத்தரவை அமல்படுத்தவற்காக தீவிர ரோந்து மற்றும் மாவட்ட எல்லைகளை மூடி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை இந்த ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்ற 200 பேரைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி அவா்கள் மீது வழக்குப் பதிந்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
சில இடங்களில் போலீஸாா், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவா்களை நிறுத்தி,அவா்களை இரு மீட்டா் இடைவெளியில் நிற்க வைத்து தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.