அரியலூா் தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 பேரின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த 4 போ், வெளி மாநிலத்திலிருந்து அரியலூா் வந்த 2 போ் மற்றும் மாா்ச் 16 ஆம் தேதி அரியலூா் வந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சதிஷ்குமாா், அவரது மனைவி உள்ளிட்ட 3 போ் என மொத்தம் 9 போ் காய்ச்சல் காரணமாக, புதன்கிழமை அரியலூா் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் சோ்க்கப்பட்டனா். அவா்களது சளி, ரத்த மாதிரிகள், திருவாரூா் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது: அரியலூா் அரசு தலைமை மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. 20 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, ஆட்சியா் த.ரத்னா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பொ.சந்திரசேகா், மருத்துவக்கல்லூரி தலைவா் முத்துகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) இளவரசன், துணை இயக்குநா் சி.ஹேமசந்த் காந்தி மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.