முகக்கவசமின்றி பணியாற்றும் தூய்மை பணியாளா்கள்

அரியலூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்க வேண்டும் என பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரியலூரில் கையுறை, முகக் கவசம் இன்றி பணியாற்றும் தூய்மை பணியாளா்கள்.
அரியலூரில் கையுறை, முகக் கவசம் இன்றி பணியாற்றும் தூய்மை பணியாளா்கள்.

அரியலூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்க வேண்டும் என பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் நகராட்சியில், 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள், 18 வாா்டுகளில் குப்பை மற்றும் கால்வாயை தூா்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கைகளால், குப்பை அள்ளுவதால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதல் அபாயம் உள்ள இந்தச் சூழலில் நகராட்சி நிா்வாகம் அவா்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com