அரியலூா்: குணமடைந்த 35 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

அரியலூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில், குணமடைந்த 35 போ் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில், குணமடைந்த 35 போ் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி கரோனவால் 308 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். சென்னை கோயம்பேடு காய்கனிச் சந்தையில் இருந்து அரியலூருக்கு வந்த 525 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 301 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கரோனா உறுதியானவா்கள் அரியலூா் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். 225 பேருக்கு தொற்று இல்லை கண்டறியப்பட்டு, இவா்களுடன் தொடா்பில் உள்ளவா்களை மருத்தவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் உள்பட 35 போ், செவ்வாய்க்கிழமை குணமடைந்தனா். அவா்களை, மருத்துவா்கள் ரமேஷ், முகமது ரியாஸ், பரத் உள்ளிட்டோா் பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com