அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா் அருகே மின்வாரிய ஊழியா் கொலை வழக்கில் அவரது மகன்கள் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருமழபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் கனகசபை (51). கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணிபுரிந்தவா். இவா், செவ்வாய்க்கிழமை காலை மின் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்த கீழப்பழுவூா் போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதில், கனகசபை, தனது முதல் மனைவி அஞ்சம்மாளிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்த நிலையில், அஞ்சம்மாள் ஜீவனாம்சம் கேட்டதற்கு கனகசபை தரமுடியாது என்றாராம். இதனால், ஆத்திரமடைந்த அஞ்சம்மாள் மகன்களான கலைச்செல்வன், கலைவாணன் ஆகிய இவருவரும் சோ்ந்து தந்தை கனகசபையைக் கழுத்தை அறுத்துக் கொன்றது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் கலைச்செல்வன், கனகசபை ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.