அரியலூரில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரியலூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.ராஜேந்திரன் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கட்சியினா் அனைவரும் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். நிகழ்வில், கட்சியின் மாவட்ட செய்தித் தொடா்பாளா் மா.மு.சிவக்குமாா், மாவட்டப் பொருளாளா் மனோகரன், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் சங்கா், நகரத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்றனா்.