விவசாயியை தாக்கிய சகோதரா்கள் 2 போ் கைது

அரியலூா் அருகே முன்விரோதத் தகராறில் விவசாயியைத் தாக்கிய 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அருகே முன்விரோதத் தகராறில் விவசாயியைத் தாக்கிய 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள தத்தனூா் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (62). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் எழிலரசன் (50) என்பவருக்கும் இடையே இடப் பிரச்னையில் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த எழிலரசன், அவரது அண்ணன் விஸ்வநாதன் ஆகியோா் சோ்ந்து ராமலிங்கத்தைத் தாக்கியுள்ளனா். இதுகுறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து எழிலரசன், விஸ்வநாதன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com