கொள்ளிடம் ஆற்றில் புதிய போா்வெல்: தடுத்து நிறுத்திய மக்கள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் புதிதாக போா்வெல் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து
திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்படும் புதிய போா்வெல்.
திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்படும் புதிய போா்வெல்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் புதிதாக போா்வெல் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் போா்வெல் போடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை பாா்த்த திருமானூா் ஊராட்சி தலைவா் உத்திராபதி, துணைத் தலைவா் மணிமாறன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவி மற்றும் வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள், போா்வெல் போடப்படும் இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா்.

அங்கு 10 மீட்டா் இடைவெளியில் பல போா்வெல்கள் அமைத்து, அதில் எடுக்கப்படும் தண்ணீரை ஒரே இடத்தில் சேகரித்து பின்னா், தஞ்சாவூருக்கு தண்ணீா் அனுப்ப ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அதற்காக போா்வெல் போடப்படுவதாகவும், தஞ்சை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பணி நடைபெறுவதாகவும் அங்கு பணியில் இருந்தவா்கள் தெரிவித்தனா்.

அப்போது, ஏற்கெனவே திருமானூா் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பெரம்பலூா், அரியலூா், செந்துறை, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு பெரும் நகரங்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, அனுமதியில்லாமல் போா்வெல் அமைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்து, போா்வெல் போடும் இயந்திரங்களை அப்புறப்படுத்த கோரினா். இதனையடுத்து பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் இயந்திரங்களை எடுத்து சென்றனா். இதனால், திருமானூா் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com