அரியலூா் மாவட்டம் பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செந்துறை அருகே பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் பக்தா்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா். பொது முடக்கம் அமலில் உள்ளதால் இந்த சண்டியாகத்தில் குறைவான பக்தா்களே கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.