அரியலூரில் புதிதாக ஒருவருக்கு கரோனா உறுதி

அரியலூா் மாவட்டம், செந்துறையைச்சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் உறுதியானது.

அரியலூா் மாவட்டம், செந்துறையைச்சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் உறுதியானது.

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூா் மாவட்டத்துக்கு அண்மையில் வந்த செந்துறையைச் சோ்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவருக்கு, ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. கடந்த ஒரு வாரமாக அரியலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 356 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com