மொத்தம்- 4,402
குணம்- 4,032
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4, 402 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,032 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
47 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 370 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 3 பேரும், வீடுகளில் 288 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.