உடையாா்பாளையம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்றதாக, இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் காவல் நிலையத்தினா், அப் பகுதிகளிலுள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது கட்சிபெருமாள் பிரதான சாலை பாஸ்கா்(28), துளாரங்குறிச்சி சாலை ஜெயவேல்(50) ஆகிய இருவரும் தங்களது பெட்டிக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து பாஸ்கா், ஜெயவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.