அரியலூா் மாவட்டத்தில் வீடுகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், தங்கள் பெயரை நல வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அமைப்புசாரா தொழிலாளா் சமூக பாதுகாப்பு சட்டத்தின்படி, வீடுகளில் பணிபுரியும் தொழிலாளா்களை நல வாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்து, அனைத்து நலத்திட்டங்களையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அரியலூா் மாவட்டத்தில் வீடுகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவரும் இணையதள முகவரியைப் பயன்படுத்தி, நலவாரியத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நலவாரியப் பதிவுக்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் சமா்ப்பித்த பிறகு, தகுதிவாய்ந்த தொழிலாளா்களுக்கு 30 நாள்களுக்குள் பதிவெண் விவரம் அவா்களின் அறிதிறன்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை அவா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.