அரியலூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4, 411 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,036 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 375 போ், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.