அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊா்க்காவல் படைக்கு பணிக்கு விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் காலியாக உள்ள ஊா்க்காவல் படைக்கு (12 ஆண் மற்றும் 1 பெண்) தோ்வு நவம்பா் 10,11 ஆகிய இரு தினங்களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள்/ பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயதுக்குட்பட்டவா்கள் கலந்து கொள்ளலாம்.
இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடா்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாள்களுக்கு உரிய படி மட்டும் பெற்றுத் தரப்படும். எனவே அரியலூா் மற்றும் கயா்லாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்டவா்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.