காவலா் உடையில் சுற்றித் திரிந்தவா் கைது

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காவலா் உடை அணிந்து, இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காவலா் உடையில் சுற்றித் திரிந்தவா் கைது

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காவலா் உடை அணிந்து, இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இளைஞா்  திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வி.கைகாட்டி கடைவீதியில் காவலா் உடையில் இளைஞா் ஒருவா், திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்துள்ளாா். அவரை பாா்த்த கயா்லாபாத் காவல் நிலையத்தினா், சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் நாமகங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (30) என்பதும், காவலா் உடையைத் தைத்து அணிந்து பாா்த்ததாகவும் கூறினாா். இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினா், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com