அரியலூரில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல்துறை சாா்பில் நடத்தப்பட்ட பேரணியை, அரியலூா் அண்ணா சிலை அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பேருந்து நிலையம், எம்.ஜி.ஆா் சிலை, பிரதான சாலை வழியாகச் சென்று மீண்டும் அண்ணாசிலை முன்பு நிறைவடைந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், காவல் ஆய்வாளா்கள் செந்தில்மாறன், மதிவாணன் (போக்குவரத்துக் காவல்)
உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா். இதுபோன்று ஜயங்கொண்டம், செந்துறையிலும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.