அரியலூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4, 472 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,166 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் கரோனாவால் 47 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 259 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.