அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, தமிழ்நாடு ஏஐடியூசி ஆட்டோ ஓட்டும் தொழிலாளா் சங்கத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் த.தண்டபாணி நிகழ்வில் பங்கேற்று, சங்கத்தினா் பெயா் பலகையைத் திறந்துவைத்தாா். ஆட்டோ ஓட்டும் தொழிலாளா் சங்கச் செயலா் அறிவொளி, பொருளாளா் எம்.ராமசாமி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ்.செல்வக்குமாா், சி.சக்திவேல் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனா்.