சிறுபான்மையின மாணவா்கள்கல்வி உதவித்தொகை பெற...

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் தகுதியுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் தகுதியுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்த மதத்தினா் பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.  தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளம் வழியே ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசித் தேதி 31.11.2020. ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி நிலையத்துக்கு அனுப்பாத இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com