விஷம் குடித்து இளைஞா் பலி

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விஷம் அருந்திய இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விஷம் அருந்திய இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிராஜன்(30). காா் ஓட்டுநா். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் பழனிராஜன் புதன்கிழமை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு கிசிச்சை பலனின்றி பழனிராஜன் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். புகாரின்பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com