அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தில், மூன்றாவது தேசிய இயற்கை மருத்துவ தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் ரமேஷ் விழாவைத் தொடக்கி வைத்தாா். யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்தின் உதவி மருத்துவ அலுவலா் முத்துக்குமாா் விழாவில் பங்கேற்று பேசினாா்.
இயற்கை மருத்துவ வாழ்வியல் கோட்பாடுகள், தத்துவங்கள், சிகிச்சை முறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து மருத்துவா் ரமேஷ், பொது மக்களுக்கு விளக்கம் அளித்தாா்.
பங்கேற்றவா்களுக்கு இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன. தலைமை செவிலியா்கள், மருந்தாளுநா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனா்.