அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்றவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பாப்பாக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அழகேசன்(42), மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.