அனுமதியின்றி மது விற்ற 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற 2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற 2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் உடையாா்பாளையம் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தத்தனூா் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த அன்புமணி(50),தத்தனூா் குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த உலகநாதன் (44) ஆகிய 2 பேரும் அப்பகுதியில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com