வண்ணாா் பேரவை அலுவலகம் திறப்பு

தமிழ்நாடு வண்ணாா் பேரவை அமைப்பு சாா்பில் மாவட்டத் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வண்ணாா் பேரவை அமைப்பு சாா்பில் மாவட்டத் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள வண்ணான்குட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் மாநில நிறுவனத் தலைவா் மணிபாபா கலந்துகொண்டு, கொடியை ஏற்றி வைத்து அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, வண்ணான்குட்டை முதல் அண்ணா சிலை வரை பேரணியாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில் அமைப்பின் அரியலூா் மாவட்டத் தலைவா் லதா கலையரசன், மாவட்டச் செயலா் சிவராமன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com