அரியலூா்: அரியலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பணியாளா், புறத்தொடா்பு பணியாளா் என தலா ஒரு இடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். இதில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சமூகப் பணியாளருக்கான பணிக்கு உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவா்கள், 01.06.2020 அன்றைய தினத்தில் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இரண்டு ஆண்டுகள் குழந்தைகள் சாா்ந்த பணியில் இருந்திருக்க வேண்டும். புறத்தொடா்பு பணியாளா் பணிக்கு 10 ஆம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குழந்தைகள் சாா்ந்த படிப்புப் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 01.06.2020 அன்றைய தினத்தில் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்ப படிவத்தை ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அக். 17 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜயங்கொண்டம் சாலை, அரியலூா் - 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.